ப்ரியதர்ஷினி என்னும் மாய கண்ணாடி

சமீபத்தில் மாயாபஜார் பார்த்தேன் (வட்ட சொந்தமா காசு கொடுத்து வாங்கினது, சும்மா வந்ததில்லை. என்ன ஆச்சு இவனுக்குன்னுனெல்லாம் நினைக்காம மேல படிங்க) இப்ப இருக்கற ஹைடெக்கெல்லாம் நம்ம மகாபாரத்துலசும்மா சர்வசாதாரணமா உபயோகிச்சுருக்காங்கன்னு பாக்குறப்போ ஒரே புளங்காகிதம் பிச்சுக்கிட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன்னா பாருங்களேன்.

காட்சி இதுதான். இடம் இப்போ தண்ணிக்கு அடில போய்ட்ட துவாரகை:

கிருஷ்ணன்(NTR) ஹஸ்தினாபுரத்திலிருந்து வருகிறார். பலராமனின்(பாலசுப்ரமணியன்) புத்ரி வத்ஸலா(சாவித்ரி) சந்தோஷமும் நானமும் பொங்க ஓடிவருகிறாள். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே பாண்டவர்கள் கொடுத்தனுப்பிய பரிசுப்பொருட்களை ஒவ்வொன்றாக ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார். கடைசியில் அவளை கூப்பிட்டு அர்ஜுனன் மகன் அபிமன்யு(ஜெமினி) உனக்கு இதை கொடுத்தான் என ஒரு பேழையை (அதாம்பா பொட்டி) கொடுப்பார். அதன் பெயர் ப்ரியத்ர்ஷினி என்றும், யாருக்கு எது விருப்பமோ அதை காட்டும் என கூறுவார். ஒரே வெட்க்கம் பிடுங்கித்தின்ன அதை எடுத்துக்கொண்டு உள்ளே ஒடி சென்று அந்த பேழையை திரப்பார். உடனே, அதன் மூடியின் உள் திரையில் (என்னா ரெஸ்ல்யூஷன் LCDல்லாம் பிச்சை வாங்கனும்) இளமை துள்ளளுடன் ஜெமினி (சும்மாவா காதல் மன்னன்னு பட்டம் கொடுத்தாங்க?)

நீதானா என்னை அழைத்தது
நீதானா என்னை நினைத்தது
நீதானா எந்தன் இதயத்திலே நிலைத்டுமாறி உலவியது...(கண்டசாலா இசையமைத்து சுசிலாவுடன் பாடியது)

என்றூபாட, பின்பு சாவிதிரியும் சேர்ந்துபாட ..

ஆக இன்னக்கி Laptopப்ப அன்னக்கே அபிமன்யு அனுப்பிச்சுட்டார்யா. அதுவும் சும்மாவா, வையர்லெஸ் நெட் எனேபில்டு லாப்டாப்பு, சும்மா பொட்டிய திரந்தவொடனே ஸ்க்ரீன்ல ஹஸ்தினாபூர் நெட்லேர்ந்து வெப்காமிரால அவர் பாட இங்கே துவாரகையில் இந்தம்மா இங்கன ஜாயின் பண்ணி தூள்பா.

மாகாபரத்த எழுதின கவிக்கு இன்னா தொலைநோக்குப்பா?

ஆக தமிழ்மக்கள் மடிக்கணணி அது இதுன்னு மண்டய ஒடக்காமெ இப்படி வெச்சுக்கலாம்

Laptop/Notebook - ப்ரியதர்ஷினி
Laptop/Notebook with wireless net - திவ்யதர்ஷினி

இதுல முக்கியமா என்ன கவனிக்கனும்னா இந்த படத்தோட ஒளிபதிவாளர் வி. கிருஷ்ணன், மே 5, 2005 விகடன் கற்றதும் பெற்றதும்-ல சுஜாதா மெச்சியிருக்கர மாதிரி மிக அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக இந்த லாப்புடாப்பு ஜிங்கிடி சாமாச்சாரமெல்லாம் அப்போவே சினிமால காட்டறதுன்னா பெரிய விஷயம்தான். வாழ்க கிருஷ்ணன் புகழ்.

என் அம்மா வளையம் விடுவாள்

மிகவும் அன்பானவள்
என் அம்மா
அப்பாவை தூர வைத்துவிட்டு
எனக்காக வாழுகிறாள்
எங்கு போனாலும்
தூக்கிச் செல்வாள்
இன்றும் அமர்ந்திருக்கிறேன்
அவள் இடுப்பில்
என் முகத்தை
வருடிச் செல்லும்
அவள் விட்ட
புகையில் முளைத்த
வளையம் சொல்லும்
என் அம்மா
மிகவும் அன்பானவள்.

அகழ்வாராய்ச்சி-3


லஞ்சப் புலம்பல்


அதைச் செய்வதற்காக
அமர்த்தப்பட்டிருந்தாலும்
அது உன் கடமையென்றாலும்
'எனக்காக' நீ செய்வதும்
அது கண்டு நான்
'அன்புடன்' கொடுப்பதும்
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
நம் பின்னே
ஆட்டுக் கூட்டமே வந்தாலும்
இன்னும் சிலர் மட்டும்
இதை லஞ்சம் என்றே
புலம்புகின்றனர்
என்ன செய்ய?

-----------------------------------------

நகலாளர்கள்

சாப்பிடத் தெரிந்த
எல்லோருக்கும்
சமைக்கத்தெரியாது
சுயமாய் சுவையாய் சமைப்பவர் சிலர்
பார்த்து சமைப்பவர் மேலும் சிலர்
காரம் கூடியும்
உப்பு குரைந்தும்
சுமாராய் சமைக்கும் மற்றும் பலர்
இவர்களால்
உண்ணுவோருக்கு ஊறேதுமில்லை
சமைத்தவனிருக்க
தான் சமைத்ததாகக்
கூறும் கூட்டமிருக்கிறதே
அது ஆபத்தானது
உண்ணுவோர் கவனிக்க.

--------------------------------------------


சும்மாக் கவிதை

அடிக்கடி பார்க்கிறவரை
அகஸ்மாத்தான் இடத்தில்
கண்டபோது
'எங்கே இந்த்ப்பக்கம்' என்றாய்ந்த போது
- சும்மா என்றார்.
தபாலாபிஸில் கண்டவர்
சும்மா தெரிந்தவருக்கு
கடிதமெழுதுவதாகவும்
பஸ்ஸில் கண்டவர்
சும்மா கடைக்குப் போவதாகவும்
கோவிலில் கண்டவர்
சும்மா கும்பிட வந்தாகவும்
தியேட்டரில் கண்டவர்
சும்மா படம் பார்க்க வந்ததாகவும்
ஹோட்டலில் கண்டவர்
சும்மா சாப்பிட வந்ததாகவும்
இப்படி பல பேர்
சும்மா எடையெதையோ செய்ய
நானும் சும்மா இப்படி..