இடம் பெயர்

பொய்த்து போன மழையாலோ
இல்லை வெய்யிலாலோ
துளிர்ப்பதும் பூப்பதும் குறைந்தபோதும்
அலையும் காற்றை நுகர்ந்து
பெரும் நம்பிக்கை கொண்டு அங்கேயே நிற்கும் மரம்;
குறைந்து போன வருவாயும்
பங்கு சந்தை சரிவாலும்
மதிப்பிழந்து போன பணத்தாலும்
வேலையிழந்து போனதாலும்
மனமொடிந்து குடிபெயரும் திட்டம்
மனித மனம் மட்டுமே உருவாக்கும்
மரங்கள் என்ன நகர்ந்தா போய்விடும்?

0 comments: