வலைப்பதிவர் மாநாடு : இரண்டாம் அறிவிப்பு

இரண்டாவதா? அப்ப முதல் எங்கன்னு கேக்றவங்க இங்க பாருங்க.

"அப்பா டான் ப்ராஷ்க்கு ஓட்டு போடாதே" அப்டின்னு நேத்து எனககு ஒருத்தர் அட்வைஸ் பண்ணினாரு. அது யாருன்னா நம்ம புள்ளாண்டன் (ஒம்பது வயசுதா ஆகுது). என்னடான்னா அவன் பள்ளிக்கூடத்துல மத்த கிவி புள்ளங்கெல்லாம் நேஷ்னல் பார்டி ஆட்சிக்கு வந்தா உங்களெல்லாம் (அதாவது ஆசியாவிலிருந்து வந்தவங்கள) திரும்ப உங்க நாட்டுக்கே அனுப்சுருவாங்கன்னு 'டிஸ்கஸ்' பண்ணிக்கிட்டாங்களாம். என்ன சொல்றதுன்னே தெரில போங்க. நாம இவிங்க ஸ்கூலுக்கு போயி ஏதோ வாய்பாடம், படம் போடறது, ஆங்கில இலக்கணம் படிக்கிறதுன்னு ஏதாவது கத்துக்குவாய்ங்கன்னு பாத்தா நமமெக்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு போய்ட்ருக்காய்ங்க.

ஆக மக்களே இதமாதிரி சாமாச்சாரம் (உள்)நாட்டு நடப்புன்னு எல்லாத்த பத்தியும்
இந்த மாத இறுதியில் நியுசிலாந்தில், க்ரைஸ்ட்சர்சில் வலைபதிவு மாநாட்டுல விவாதம் பண்ணலாம். கலந்துக்க விரும்புறவங்க அவவங்க வீட்டையோ, அல்லது காரையோ விற்று சொந்த செலவில் வந்து கலந்துக்கணும்னு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் சிற்பம்சமா "100 பதிவுகள் கண்ட" அஸி-நியுஸி பிராந்த்தியத்தின் தலைசிறந்த வலைபதிவாளினி துளசி கோபால் அவர்களை பேட்டி காண உள்ளேன். ஆகவே, இவங்க கிட்ட நீங்க கேக்க நெனச்சு தள்ளிப்போட்ட கேள்விகளை என் தனி மடலுக்கு அனுப்பவும் (பின்னூட்டத்துல போட்டீங்கன்னா துளசி படிச்சு உஷாராயிடுவாங்க அதுனால ரகசியமா இருக்க தனிமடலிலே அனுப்பவும்). பேட்டியை பின்பு மாநாட்டுக்கு வரயிலாதவர்கள் வசதிக்காக என் வலையில் பதிக்கப்படும்.

5 comments:

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))

கிவியன் said...

இன்னும் கேள்விகள் எதிர்பார்க்கிறேன்

துளசி கோபால் said...

கேள்விகளை நானே கேக்கணுமா:-)))

கிவியன் said...
This comment has been removed by a blog administrator.
கிவியன் said...

நாங்கதான் 'தருமி' நீங்க கேக்க கூடாது.