இந்தியாவில் ஆண்களை நம்ப முடியாது

--அப்படின்னு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா செளத்ரி சொல்லியிருக்காங்க. வீட்ட விட்டு வெளில போகும் ஆம்பளங்க இரவு வீட்டுக்கு திரும்ப வரதுக்கு முன்னாடி எங்கெல்லாம் போறாங்கன்னு வீடல இருக்கும் பொம்பளங்களுக்கு தெரியாது. அதனால அமைச்சர் என்ன சொலறாஙகன்னா பெண்கள் அவசியம் ஆணுறை உபயோகிக்க வேண்டும் என்று.

இப்படி ஒரே போடா போட்டுட்டாங்களேன்னு பாத்தா ஒரு வகைல கட்டுக்கடங்காம பரவும் எய்ட்ஸ் நோயால் (2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் அதில் 40 சதவிகிதம் பெண்கள் இதில பலர் குடும்ப பெண்கள், இவர்களுக்கு எய்ட்ஸ் வந்தது அவுங்கவுங்க ஊட்டுகாரர் மூலமாக) . இதுனாலதான் ரேணுகா, என்ன செய்வதென்று தெரியாமல் நொந்து போய் இப்படி சொல்லியிருக்காங்க. பல பெண்கள் தங்கள் (வேறு பெண்களிடம் போய் வரும்) கணவரிடம் பாதுகாப்பான உறவு வைத்துக்கொள்ள கேட்க்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை என்பதால் பலர் இதற்கு பலியாகி உள்ளனர். ஒரு கோடி மக்கள் தொகையை தாண்டி போய்கொண்டிருக்கும் இந்தியாவில் செக்ஸ் பறறி பேசவே கூச்சப்பட்டுக்கொண்டிருந்தால எய்ட்ஸை எப்படி கட்டுப்படுத்துவது? ரேணுகா சொல்வது சரிதான்.

1 comments:

துளசி கோபால் said...

சொன்னது அமைச்சர் என்றதாலெ
'வெளக்குமாத்து ஊர்வலம்' இருக்காதுன்னு நம்பறேன்.