வாழ்க்கையெனும்..

விசாலமான கூண்டின்
மூலையில் அமர்ந்து
வாலில் எதையோ தேடிக்கொண்டிருந்தது
அருகே பார்த்துவிட
ஆவல் கொண்டு
இரும்புக் கம்பிகளுக்கிடையே
முகம் புதைத்து
கையை ஆட்டியும்
சத்தம் கொடுத்தும்
குச்சியொன்றை வீசியும்
கவனிக்காதிருப்பது கண்டு
கையிலிருந்த பொரியையும் வீசி
அது செய்த அலட்சியத்தால்
கோபம் கொண்டு
விலகிப்போக எத்தனிக்கையில்
நிமிர்ந்து பார்த்த
அதன் முகபாவம்
என்னைப் பாத்து
சிரித்த மாதிரி இருந்தது

---------------------------
ஜூலை 1998
தோன்றிய இடம் அண்ணா வனவிலங்கு அருங்காட்சியகம், சென்னை.

0 comments: