அகழ்வாராய்ச்சி..

தோண்டியதில் கிடைத்தது. (வீட்லதாங்க, எப்பவோ நாம மும்பாய்ல வாழ்ந்தப்ப அப்பப்ப தோணினத எழுதிவெச்சது, இப்போ எதையோ தேடப்போய் கிடைத்தது. சரி ஒன்னொன்னா வலையேத்திரதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்டா இவனுக்கு இது இப்போ கையில கிடச்சதோன்னு நீங்க நினைக்க மாட்டீங்க, அது உங்க பெரிய மனசு.)




இருத்தலியல்




ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே
வெட்டி அடுக்கப்பட்ட மரங்கள்
பெய்து ஓய்ந்த மழையில்
வளர்ந்திருந்தது
பச்சை மரத்தில் பாசியும்
காய்ந்த மரத்தில் காளானும்
காளான் என்னவோ
அழகாகவே இருந்தது.

----------------------------
ஆகஸ்ட், 1992

0 comments: