நடந்தவை நடப்பவை-13

வேல்ஸ் இளவரசன் வில்லியம் (அப்பா சார்லஸ்ஸ எப்ப அரசனாவாரோ??) நியுசி சுற்று பயனத்தின்போது ஒரு வழியாக நியுசியின் உச்சநீதி மன்றதிற்கான கட்டிடத்தை வெல்லிங்கடனில் இந்த வாரம் 18ம் தேதி மூக்கு உறசல், ஹக்கா டான்ஸ் ஆட்டுத்தோல் போர்வை சகிதமாக திறந்து வைத்திருக்கிறார். கட்டிடத்தை திறந்து வைத்து, ராணிக்கும் நியுசிக்குமான பாத்யதையை சொல்லி அதாவது இப்பவும் ராணிதான் நியுசியின் தலைவி என்று, ஒரு இடத்தில் கூட குடியரசு (ரிப்பப்ளிக்) என்ற வார்த்தை வந்துவிடாமல் மிக கவனமாக பேசியிருக்கிறார்.

இந்த உச்ச நீதிமன்றம் 2004ல் தான் செயல் படத்துவங்கியது. அதற்கு முன்புவரை உயர்நீதிதான் அதுக்கு மேல லண்டனில் உள்ள Judicial Committee of Privy council என்னும் ராச பரிபாலன குழுவிடம் தான் போகவேண்டும் என இருந்தது. அங்குமிங்குமாக நியுசியை குடியரசா மாத்தி, வேர தேசிய கொடியும், நல்ல டியுன்ல ஒரு தேசிய கீதமும் வேணும் என முனுமுனுப்பு நாட்டுக்குள்ள இருக்கு. எப்ப நடக்குமோ, இன்னும் கடவுளே ராணிய காப்பாத்துன்னுதான் பாடிக்கிட்டு இருக்காங்க.


நேற்று இரவு Channel 4ல் யுக்கேயின் புகழ் பெற்ற நளமகாராசா Gordon Ramsey ன் தொடரான Gordon's Great Escape இந்திய சுற்றுப்பயனத்தின் ஒரு பகுதியில், ஒரு நாளுக்கு மேல் அசைவ உணவு இல்லை எனறால் உயிர் வாழ்வது கடினம் என்கிற கொள்கையுள்ளவர் சைவ உணவே யோகத்துக்கு உகந்தது என சொல்லும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தில் தங்கி 4 நாட்களுக்கு சைவ உணவை மட்டும் சாப்பிட்ட அந்த மகோன்னத நிகழ்ச்சியை காட்டினார்கள்.

மூச்சுக்கு மூச்சு F**K என சொல்லும் இந்த நாட்டு பிரஜையாதலால் மும்பையில் காரமாக எதையோ சாப்பிட்டு விட்டு F***ng hot, f***ng spicy என ஆரம்பித்தது, யோக மையத்தில் ஒரு நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டதால் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை ஒப்புக்கொண்டு, சைவ உணவின் மேன்மை பற்றி சத்குருவிடம் கேட்ட பிறகு I think he is f***ng nuts என படு கேஷுவலாக சொல்ல முடிகிறது. பனை மரத்தில் ஏறி கள் இறக்கிய பாபுவிடமும், டாக்ஸி ட்ரைவரிடமும், புகழ் பெற்ற உணவு நிபுணரான ராஷ்மி உதய் சிங் இடமும் ஒரே மாதிரி பேசும் Gordon அதே அலைவரிசையில் ஜக்கி வாசுதேவையும் எதிர்கொள்ள முடிகிறது. Gordon பாஷையில் he is f**ng nuts! பாவம் மனுசன் 4 நாள் ஈஷா மையத்தில் இப்படி சைவ சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்திருக்கும் போல, கண்ணில் ஆர்வம் பொங்க அவர் அடுத்து கிளம்பி போனது கேரளாவில் கறி மீன் உண்ண.

இந்த வருடம் தேர்தல் இருப்பதால் கன்சர்வேடிவ்வும், லேபர் கட்சியும் மாற்றி மாற்றி காலைவாரும் அறிக்கையும், இதெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காமல் வாக்குறுதிகளை அள்ளி விடுவதுமாக இருக்கிறது. ப்ரெளனும் டார்லிங்கும் எப்படியோ சம்பந்த பட்டவர்களை நெருக்கி யுக்கே வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையில் 7000(!!) குறைந்து தற்போது 2.46 மில்லியன் மக்களுக்கு வேலையில்லை என்று ஒரு புள்ளிவிவரம் நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

தினமும் ஏதாவது கம்பெனியோ இல்லை அராசாங்க நிறுவனமோ, வங்கியோ ஆள் குறைப்பு என நூறு ஆயிரம் என வீட்டுக்கு ஆனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். முன்னுக்கு பின் முறனான புள்ளிவிவரங்கள். இதற்கிடையில் எப்படி இந்த 7000 எண்ணிக்கை வந்தது என, `இதெல்லாம் கொஞ்சாம் ஓவரா இல்ல` என்று எப்ப நம்ம வேலை போகுமோ என இருக்கும் மக்கள் தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

0 comments: