Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

தமிழ் சினிமா பற்றி பாரதிதாசன்

சமீபத்தில் ஒரு பாடலுக்காக பாரதிதாசன் படைப்புகளை புரட்டிக்கொண்டிருந்த போது புதிய உலகம் தொகுதியில் "தமிழ்நாட்டிற் சினிமா" என்னும் தலைப்பில் இந்த கவிதையை எழுதியுள்ளார்.

சினிமா எப்படிஇருக்கும் என்று, ஒரு சினிமாவை பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்திருக்கிறார் பாவேந்தர். அதனை இப்படி வெளிப்படுத்துகிறார்:

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.
ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.

பின்பு பேச்சில்லா ஆங்கிலப்படத்தை கண்டு மெய்மறந்ததை இப்படி
வெளிப்படுத்துகிறார்:

புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.
உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!


அதன் பின் இந்தியாவிலும் சினிமா தொழில் நுட்பம் பெருகி பல பேசும் படங்கள்

வெளியாக தொடங்கி அது தமழிலும் வந்தபோது,
"இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வைக்கும் நாள்எந்நாள்"
என்ற கனவுக்கு நேரெதிராக வந்த படங்களை கண்டு இப்படி எழுதுகிறார்:

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!


இன்று தமிழ் படங்கள் சில மாறுதல்கள் அடைந்தாலும், அத்திம்பேர் தமிழ் இல்லை, இந்துஸ்தான், தெலுங்கு பாடல் இல்லை, பரமசிவன் இல்லை, ஆனால் பாவேந்தர் கூறியதுபோல்
மற்றவைவெல்லாம் அப்படியே உள்ளன. மேலும்,

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!



என்று மிக நொந்து போய் இருப்பது இன்றளவும் நிறைவேரவில்லை.



ஆலடி அருணா சிவாஜியான கதை....

அதோ வருகிறது இதோ வருகிறது என்றுஒரு வழியாக ஆறிப்போன பஜ்ஜி மாதிரி கேள்விப்பட்டே முழுப்படத்தையும் பார்த்துவிட்ட சிவாஜி படத்தை அதிக செலவு என்று 350 பேர் அமரக்கூடிய விக்டோரியா பல்கலைக்கழக மெமொரியல் தியேட்டரில நேற்று இரண்டு(!!?) காட்சிகள் திரையிட்டார்கள்.

நாலு பேர் எங்க கூடினாலும் கடைசியில் "சிவாஜி எப்ப போடறாங்கன்னு?" பேச்சு வந்து நிக்கும். ஒரு மாசமாய் மக்கள் பாவம் காத்துக்கிடந்தார்கள். உலக கோடில இருக்ற நியுஸிலேயே இப்படி ஒரு பில்ட் அப்பு. போன்ல கூட "அதிருதுல்ல" அப்டீன்னு பேசரமாதிரி கிட்டத்தட்ட ஒரு ஃப்ளூ காய்சல் போல் பரவிட்டது.

நாற்பதாயிரம் டாலர்கள் கொடுத்து பொட்டியை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 12 லட்ச ரூபாய்கள். ஆக்லேண்டில் 4 காட்சிகள், வெலிங்டனில் இரண்டு காட்சிகள் என்று பார்த்தாலும் வேறு எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அதிக விலை. வசூலாயிற்றா என்று தெரியவில்லை.

எண்ணி எழுநூறு தமிழ் குடும்பங்கள் (ஈழமும், இந்தியாவும் சேர்த்து) இருக்கும் வெலிங்டன்னில் அன்றுதான் அனைவரையும் ஒரு இடத்தில் பார்க்க முடிந்தது. இதுதான் சிவாஜியின் மிகப்பெரிய வெற்றி.

ஹாலிவுட்டில் கூட ஜானாதிபதியே நேரடிடாக சண்டை போட்டு நாட்டை காப்பதுவது மாதிரி (Independance day, Air force one etc..) "கேணத்தனமா லாஜிக்கெல்லாம் பாக்காம ஜாலியா படம் பாரு நைனான்னு" டெக்னிக்கலா ஒரு ஒன்ரமணி நேரம் எப்படி போச்சுன்னு தெரியாம கண்ண கட்டிடுவாங்க அதே மாதிரிதான் சங்கரும் ரஜினியும் மூணு மணிநேரம் பண்ணுறாங்க. அனா இதுக்காக இரண்டு வருஷமா? டூஊ மச்.

படத்த பாத்தப்புறம்தான் புரிஞ்சுது இதுக்கான கரு 2004ல சங்கருக்கு கிடைச்சிருக்கு. 2004 டிசம்பர்ல ஆலடி அருணாங்கர ஒரு அரசியல் புள்ளிய போட்டு தள்ளினாங்க. ஆனா சுனாமினால மக்கள் அத மறந்துட்டாங்க. அதே மாதிரி இத மணியும் கவனிக்காம போய்டார். ஆனா சங்கர் இத சட்டுன்னு கவனிச்சுட்டாரு. அப்டி இப்டி ரஜினிய ஒத்துக்கவெச்சு நச்சுனு இப்ப "சிவாஜி".

ஆலடி அருணா எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
சிவாஜியும் அப்படியே. ஆலடி மக்களுக்காக கல்வி நிலையங்களை நிறுவினார். சிவாஜியும் டிட்டோ. தொழில்ல போட்டியாகீரானேன்னு ராஜா ஆலடியை வெட்டிக் கொலை செய்தார். ஆதிசேஷனும் சிவாஜியை சுட்டு தள்ளுகிறார். ஆனால் சிவாஜி எம்ஜியாரகி மீண்டு வருகிறார் (ஆனால் ஆலடி அப்படியெல்லாம் வர முடியாது). இது தாங்க கதை. நடுவுல விவேக், கறுப்பு பணம், லஞ்ச ஒழிப்புன்னு ஒரே தமாசு வேற.

ஆனா முக்கியமான ஒண்ணு என்னன்னா ரஜினி முன்னாடி எல்லாம் சிகரெட்ட தூக்கி போட்டு ஸ்டைல் பண்ணுவாரு இந்த படத்துல சிக்லெட். பரவாயில்ல மருத்துவர் மகன் சொன்ன்னதாயிருந்தாலும் நல்ல விஷயத்த கடைபிடிச்சிருக்கார்.

முஸ்லீம எப்படி ஹவாலாவாதிகள் மாதிரி காட்டலாம், மருத்துவ்ர் மாவட்டமான தர்மபுரிய மட்டும் "இப்படி இருக்கரத சிவாஜி அப்படி ஆக்கிருவாருன்னு" எப்படி உள் குத்துவுடலாம்னு எல்லாம் அவிங்க ஒரு இழவெயும் யோசிக்காம எடுத்ததெல்லாம் ஒரு பிரச்சானையாக்கி படத்துக்கு ஒரே அட்வர்டைஸ்மென்ட் வேற. தோட்டாவையும் ஷ்ரேயாவைய்ம் மிகச்சரியாக உபயோகிக்க தெரிந்த சங்கர் ஒரு கில்லாடி லேவாதேவிக்காரர்.

இவர் மெசேஜ பாத்துட்டு, ப்ளாக்ல டிக்கெட் விக்கலாமா, சங்கர், ரஜினியிடம் கறுப்புபணமெ இல்லயான்னு வெள்ளாந்தியா கேள்வி கேட்டுக்கிட்டிருந்தா அதுக்கு அந்த ஆலடி அருணாதான் வந்து பதில் சொல்லணும்.