Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

பரி.. பாரீஸ்



ஒரு வார காலம் பாரீஸில் போதாதுதான் இருந்தாலும் முடிந்தவரை அந்த வசீகர நகரை (மீண்டும்)சென்ற வாரம் சுறறி வந்தேன். கிட்டத்தட்ட டிசம்பர் மாத சென்னை போல 27-30 C வெய்யில் எடின்பரோவின் குளிருக்கு நல்ல மாறுதலாக இருந்தது.

14 மெட்ரோக்கள் முயல் வலை போல தரைக்கு அடியில், 5 தொலைதூர ரெர்(Rer) எனப்படும் ரயில்கள், இவை செல்லாத இடத்தை அடைய 59 பேருந்து தடங்களும் மேலும் நான்கு ட்ராம்களும் உள்ளது. ஆனால் பாரீஸ் என்னவோ நடந்தே (நடக்க முடிந்தவர்களுக்கு) பார்க்க வேண்டிய நகரம். கால் வலித்தால் மேலே சொன்ன ஏதாவது ஒரு பிரயாண வசதியை பிடித்து செல்லலாம்.

பாதாள மெட்ரோவில் சற்று கூட்டமும் வெப்பமும் அதிகமாக இருக்கும். நான் கவனித்தது இந்த் பாதாள ரயில் செல்லும் வழி எங்கும் க்ரஃபிடி எனப்படும் சுவர் கிறுக்கல்கள். வேலை மெனக்கெட்டு நள்லிரவில் இந்த ரயில்கள் ஓடாதபோது வந்து கிறுக்குவார்கள் போலிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது பிரென்ச்சுக்கான ஒரு கலை நயம் இருக்கத்தான் செய்கிறது.



(பாரீசின் புகழ் பெற்ற Galaries Laffeyetன் விளம்பரம் நகரமெங்கும்)

ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது பக்கத்து டேபிளில் இரண்டு பிரென்சு பெண்கள் வாய் ஓயாது பேசிக்கொண்டிருந்தனர். ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காமல் பிரென்சு மொழியிலேயே பேசியதை கவனித்தபோதுதான் இவர்கள் எந்த அளவுக்கு தங்கள் மொழியை பாதுகாக்கிறார்கள் என்று புரிந்தது. நம்ம தமிழிலோ, சுஜாதா சொன்ன மாதிரி, ஆயிரம் வார்த்தைகளில் தமிழ் அடங்கிவிடும் போலிருக்கிறது.
உதாரணத்துக்கு, `பில்` வந்தவுடன் `பர்ஸை` எடுத்து பணத்தை `பே` பண்ணி, வெளியே வந்து `ரோட்டை` க்ராஸ்` பண்ணி `பஸ் ஸ்டாப்புக்கு` வந்து `பஸ்` பிடித்து `டிக்கெட்` வாங்கி `சீட்`டில் அமர்ந்து யோசித்த போது சே எந்த அளவுக்கு ஆங்கிலத்தை ஊடுறுவ விட்டு அழகிய தமிழை பண்ணித்தமிழாக ஆக்கிவிட்டிருக்கிறோம்??

லண்டன் என்னும் வசீகரம்


சென்ற வார நடுவிலிருந்து இந்த வார மத்தி வரை லணடன் வாசம். ஈஷா யோகாவின் அடுத்த நிலையில் பயில்வதற்காக ஒரு வார தங்கல் அப்படியே லண்டனையும் பார்க்க ஒரு வாய்ப்பு.

கூட்டம், கோட்டு சூட்டு போட்டு காலையில் சாண்ட்விச்சோ இல்லை ஆப்பிளையோ சாப்பிட்டுக்கொண்டே பாதாளத்தில் ஓடும் ட்யூபை பிடிக்க ஓடும் அவசரகதி மக்கள், செல்லில் ஒரு பக்கம் சைன மொழியில் ஒருவர், இன்னொரு பக்கம் எமிரா என்று தெலுங்கு, மெர்சி என நன்றி கூறும் பிரெஞ்சு, சி சி என அமோதிக்கும் இத்தாலியர், கருப்பர், ஆங்காங்கே தென்படும் சர்தார்கள் என்ன பாஷை பேசுகிறார்கள் என்றே புரியாத இன்னும் பலர் ஆக மொத்த உலகமும் சங்கமிக்கும் வசீகரம் லண்டன். ஐந்தில் நாலு பேர் புகைக்கிறார்கள்.

இதில் சிலர் தகுந்த விசா இல்லாமல் அப்படியே எல்லையை கடந்து வந்தவர்கள். நான் சென்ற சமயம் வசந்த காலமாதலால் நல்ல வெய்யிலிருந்தது.


காலையிலும் மாலையிலும் இலவசமாக பேப்பர் தருகிறார்கள். இல்லையென்றால் பாதள ரயிலில் எதிர் எதிரகாக அமந்துகொண்டு எதிர்த்தார் போல் இருப்பவரின் முகத்தை சிரிக்காமல் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டுவர முடியும்? ஆக பேப்பரில் முகத்தை புதைத்துக் கொள்ளலாம். அதிலும் அனேகமாக ப்ரிட்னி ஸ்பியர்ஸ் வயிறு உப்பி இருப்பது நிச்சயம் அவர் கருவுற்றிருக்க வேண்டும் என்ற முக்கியமான தலைப்பு செய்தியை படித்து தெரிந்து கொள்ளலாம். இல்லை 8ம் பக்கம் திருப்பி லவ் லண்டன் லவ் பகுதியில்

"முந்தா நேத்து நார்த்தர்ன் லைனில் நாம ஒருத்தர ஒருத்த பார்த்து சிரிச்சோம் நான் வெஸ்ட் கெனிங்ஸ்டனில் இறங்கிவிட்டேன். நீ ப்ளு கலர் ஜாக்கெட் அணிந்திருந்தாய், உனக்கு ஓக்கேன்னா தண்ணி அடிக்கலாமா" என்பது போன்ற கண்டதும் டேடிங் டெக்ஸ்ட் மெசேஜ் படிக்கலாம். லண்டனின் விலைவாசியினால் இளம் வயதினர் பலர் தனித்தே வாழ வேண்டியுள்ளது. சிங்கிள்ஸ் க்ளப் மிகவும் அதிகமாக உள்ள நகரம் லண்டன். வாரத்தின் இறுதி என்றில்லாமல் தினமும் நள்ளிரவு வரை சத்தமான இசையுடன் குடித்து தீர்த்து விடுகிறார்கள். குடித்துவிட்டு பெண்கள் செய்யும் வன்முறை அதிமாகி உள்ளது.


இவை தவிர ராணி மாளிகையும், பிக் பென் கடிகாரமும், டவர் ப்ரிட்ஜும், லண்டன் கண்ணும், ட்ரஃபாலகர் ஸ்கொயரும், பிக்கடில்லி சர்கஸ்ஸும் இங்கு மிகப் பிரசித்தமாதலால் இப்பகுதிகளில கூட்டம் அதிகமாக இருக்கிறது. லண்டன் கண் முப்பது நிமிடங்கள் சாகவாசமாக சுற்றி இறக்கி விடும். நீண்ட வரிசை இருப்பதால் ஒரு பாதி நாள் இதிலேயே கழிந்து விடும்.

உங்களுக்கு இட்லியும் மசாலா தோசையும் சாப்பிட்ட பின் ஒரு காப்பியும் குடிக்க வேண்டும் என தோன்றினால் ஈஸ்ட் ஹாமில் ஹை ஸ்ட்ரீட் சென்றுவிட்டால், வசந்த பவனில் ஆரம்பித்து சரவண பவன் சென்னை தோசா, செட்டி நாட் என சகல ஹோட்டல்களும் உள்ளது. ப்ளாட்பாரத்தை பாதி ஆகரமித்து மேற்கூறையில் பல சாமன்களை தொங்கவிட்டு அப்படியே நம்ம சென்னை ரங்கநானதை நினைவூட்டும் பல கடைகளும் உண்டு. எங்கு போனால் என்ன தென் மக்கள் தென் மக்களே.

இடப்பெயர்ச்சி

தெற்கு அரைக்கோளத்திலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கு பிரயான நேரம் குறைந்தது 27 மணிநேரம். இரா முருகன் விட்டு சென்ற எடின்பரோ குறிப்புகளை தொடர எண்ணம். அவரளவுக்கு முடியதென்றாலும். 19 குறிப்புகளை தாண்டி என்னத்த எழுத இந்த "காரைக்குடி" சைஸ் எடின்பரோ பற்றி?

சரி முதலில் பிரயானத்தை பற்றியே எழுதலாம். அவ்வளவு விஷயமிருக்கிறது.
23 kg மேல் பெட்டி கனம் இருந்தால் இப்போது "அண்ணா இவ்வளவு வெயிட் கூட வருது, கிலோவுக்கு $75 தான் பில் போட்டுர்லாமா?" என முகத்தில் சிரிப்பு மாறாமல் கேட்கிறார்கள். என் பெட்டி 27kg. குளிர் பிரதேசம் என இரண்டு கோட்டை வைத்தது செம வெயிட். வழி அனுப்ப வந்த மனைவியிடம் பெட்டியை திறந்து கைக்கு கிடைத்ததையெல்லாம் உறுவி கொடுத்துவிட்டு மீண்டும் எடை போட்ட போது 22.9 kg. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. விமான வடிவமைப்புக்கு ஒரு மனிதனின் எடை சுமாராக 80 kg என எடுத்துக்கொள்கிறார்கள் என வைப்போம். பக்கத்து சீட்காரர் 120 கிலோ இருந்து, நீங்கள் 75 kg என்றிருந்தால், உங்களுக்கு பெட்டியில் சிறிது அதிகப்படி எடுத்து செல்ல அனுமதி தரவேண்டும். அப்ப பக்கத்து சீட்டுக்கு என கேட்டால், உங்கள விமானத்துல விடுறதே பெரிய விஷயம் கைய வீசீட்டு வாங்க அடுத்த முறை விமானம் ஏர்ரதுக்குள்ள வெயிட்ட குறைச்சுடுபா என ஒரு வசீகர கார்டு போர்டிங் பாஸுடன் கொடுக்கலாம்.

நியுஸியிலிருந்து எந்த பக்கம் பிராயணம் போனாலும் நான் கவனித்தது சகமனிதருக்கு தரும் மரியாதை(politeness) குறைந்துகொண்டே வருவது. அண்ணா ஏதோ நாலைரை மில்லியன் மக்கள் இருந்தா அதெல்லாம் இருக்கும் இப்படி வெள்ளம் மாதிரி மக்கள் தொகை இருக்க்ம் நாட்டிலெல்லாம் இத எதிர் பாக்கப்படாதுன்னு சொல்லரது கேட்க்குது. மற்றுமொன்று, ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த தனி ஆண் பிராயானம் செய்தால் விமான நிலையங்களில் தனி மரியாதைதான். சிங்கப்பூர் சாங்கியில் லண்டன் விமானத்தை பிடிக்க செக்யுரிடி செக்குக்காக நின்ற போது, என்னை அன்புடன் தனியே அழைத்து random check என கூறி, you are the privileged one (ஆஹா அப்படியா!!) என்று சிரித்த படியே சொல்லிவிட்டு, டிடெக்டர் வளையத்தை என் உடம்பெங்கும் ஓட்டி சட்டை பான்ட் பைகளை தடவி பார்த்து காபின் லக்கேஜை தலைகீழாக கவிழ்த்து, ரொம்ப நன்றி நீங்கள் போகலாம் என்று விளித்தார். இதற்கு பின் விமானத்தில் ஏற சீட் எண் படி அழைத்து அதற்கு வரிசையில் நின்ற போது மேலும் ஒரு செக்யுரிடி நேராக என்னிடம் வந்து பாஸ்போர்ட் போர்டிங் பாஸ் செக் செய்து, லண்டனில் தங்குவியா என கேட்டார், இல்லை என்றதும் எங்க போற என்றார், ஸ்காட்லேண்ட் என்றதும், அட ஆப்படி ஒரு இடமே இல்லியே மேப்ல என்பது போல் ஒரு லுக் விட்டு சரி போ என்று சென்றுவிட்டார். இதே போல் முன்பு எல்.ஏயிலும், பின்பு ஹாங்காங்கிலும் நடந்தது. எனக்கென்னமோ என்னை மாதிரி ஒரு ஆளை வலிவீசி தேடிக்கொண்டிருப்பது போல் பட்டது. பென்டு நிமித்தாம விட்டா சரி. இங்கு கவனிக்க வேண்டியது அவர்கள்(செக்யுரிடி) ஜோக்கடித்து பேசினால் நீங்கள் சிரிக்கலாம், இல்லை இப்ப என்ன இழவு ஜோக் வேண்டி கிடக்கு என லுக் விடலாம். ஆனால் பதிலுக்கு நீங்கள் ஜோக் மாத்திரம் அடிக்காதீர்கள். ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வாய்பிருக்கிறது.

மற்றொரு விஷயம் மிக நுட்பமாக கவனித்தது, ஆக்லேன்டிலுருந்து வந்த விமானத்திலிருந்து சிங்கப்பூர் வந்திரங்கியபோடு அதிகாலை 5.30 மணி. புதிதாக கட்டியுள்ள 3ம் நிலையத்தில் ஏரோ ப்ரிட்ஜ்ஜை விட்டு நிலைய நுழை வாசல் வந்ததும் அங்கே ஒரு பணிப்பெண் நின்று கொண்டு எல்லோருக்ககும் காலை வணக்கம் கூறி வரவேற்றுக்கொண்டிருந்தாள் (போட்டி என வந்துவிட்டால் என்ன வெல்லாம் செய்கிறார்கள்?) எனக்கு முன்னும் பின்னும் பல வெள்ளையர்கள். முகத்தில் ஒரு புன்னகையுடன் அநத பெண் எல்லோருக்கும் வண்க்கம் வைத்துக்கொண்டிருந்தாள். நான் சற்று தனித்தே வந்து கொண்டிருந்தேன், அதுவரை சொல்லிக்கொண்டிருந்தவள் சற்று என்னை உற்று கவனித்தாள் புன்னகை மறைந்தது நான் அவளை கடக்கும் வரை மெளனம் கடந்தத பின் மறுபடி வணக்கம் என என் பின்னே வந்த வெள்ளைக்கு. பெரிய விஷயமில்லை ஆனால் அந்த பணிப்பெண் நம் திராவிட நாட்டை சேர்ந்தவள். என்னவென்று சொல்லுவது?

லண்டன் ஹீத்ரோவில் 4 நிலையங்கள் (terminals) இருந்து ஐந்தாவது நிலையம் கடந்த 5 வருடங்களாக கட்டுமானம் நடந்து இப்போது முடிவடைந்து, இந்த மாதம் 14 தேதி இங்கிலாந்து ராணியால் திறந்து வைக்கப்பட்டது. 27தேதி முதல் பொதுமக்களுக்கு. இதனால் பிரயானிகளுக்கு சற்று சுலபமாககும் என சொல்கிறார்கள். இருந்தால் சரி. ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலைத்திற்கு மாறுவது சற்று கடினமே அதுவும் லக்கேஜ் வண்டியை தள்ளிக்கொண்டு மைல் கணக்கில் நீளும் சுரங்க நடைபாதையில் சற்றே கவனிக்காமல் போனால் வேறு எங்காவது கொண்டுவிட்டுவிடும்.

பிராயாணத்தின் போது வேறு வழியேயின்றி நான் பார்த்த படங்கள்:

American Gangster - Denzel Washingtonனின் நடிப்பை தவிர இந்த படத்தில் ஒன்றும் விசேஷமாக ஒன்றுமில்லை. காட்ஃபாதர் போன்று இன்னும் எத்தனை படங்கள் எடுப்பார்களோ.
Romulus my father - நல்ல படம். Eric Bana மிக அற்புதமாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்குமான் உறவை சொல்லும் படம். ஒளிப்பதிவு மிகப் பிரமாதம்.
High School Musical 2- கிட்டத்தட்ட நம்ம தமிழ் படம் மாதிரி ஜாலியாக பாட்டும் டான்ஸும் குடும்பத்துடன் பார்க்கலாம்.
மலைக்கோட்டை-டமில் படம் நம்ம நெட்டை நடிகர் விஷால் நடித்தது, கை விரலை காண்பித்து, இருக்கர எல்லா கோட்டை ஊர்களின் பெயரை அடுக்கி அது எல்லாத்தையும் பார்த்ததாக் கூறி ஒரு '&$%*யும் பிடுங்க முடியாது என்று பின்னி பெடலெடுத்து (அப்டீன்னா என்னங்க?) பாதி படம் முடிவதற்குள் தலைவலி வந்து விட்டது.

ஆக இவ்வளவு கஷ்டங்களையும் 27 மணிநேரத்திற்குள் அனுபவித்து ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்து முன் பின் அறிந்திராத (மின்ஞ்சல் மூலம் நட்பு) நண்பர் விமான நிலையத்திற்கு வந்து அழைத்து சென்று சுடச்சுட சாதமும் குழப்பும் வைத்து(தானே சமைத்து) உபசரித்தது, இவ்வளவு கஷ்டங்களையும், இது மாதிரி ஒரு நண்பர் கிடைப்பார் என்றால், மறுபடியும் பட முடியும் என்று தோன்றியது.

குடிபெயர் காலம்

சில வேளை நடப்பது நம் கையில் இல்லை என்பது சந்தேகமின்றி நிரூபிப்பது போல சம்பவங்கள் நடந்தேறும். சில விருப்பமுள்ள திருப்பங்கள் சில விருப்பமில்லாதவை...

அப்படி ஒன்று இந்த செமி கோலன் தேசத்தில் நடந்ததால் நான் மீண்டும் பெட்டியை கட்டி மறுபடி ஒரு குடி பெயர்தல்...விருப்பு வெறுப்பு எதுவுமின்றி நிகழ்கிறது..

மீண்டும் பயணம், என் நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், எதிர்பார்புகளுடன்...

மனிதர்கள் பல வகை, பல நல்ல, சில கெட்ட, சில அருவருக்கத்தக்க அனுபங்கள் எனினும் வழ்கைக்கு அனுபவமே அஸ்திவாரம்..

இந்த உலகம் பெரிது வாழும் நாட்கள் சிறிது இயற்கை அற்புதமானது அனுபவிக்க கிடைக்கும் வாய்புகளை சில சொந்த காரணங்களுக்காக பல சமயம் தள்ளி வைத்துவிடுகிறோம்..

சரி கிளம்புவதற்கு முன் ஒரு நடப்பவை நடந்தவை ...

நியுஸி நாட்டு நடப்புகள்:

இந்த வருடம் தேர்தல். அதனால் மக்களை கவர ஆளாளுக்கு அள்ளி விடுகின்றனர். வருமான வரி குறைப்பு, மாணவர்களுக்கு படிப்பு சலுகை என்று..

இந்த ஊரிலும் விமானத்தை கடத்துகிறார்கள் காரணமேயின்றி..ஏதோ கல்லும் நாயும் கிடைத்து போல்...ஆக மொத்தம் அப்பாவி பயணிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டதுதான் மிச்சம். ப்லேன்ஹிம் விமான நிலையத்தில் இதுவரை கோயம்பேடு பஸ்டான்ட் போல் செக்யூரிடி செக் எதுவுமின்றி பயணம் செய்ததை மாற்றி இனி சோதிக்கப் படுவார்கள் என மாற்றி விட்டர்கள்.

வீட்டுக் கடன் வட்டி கிட்டத்தட்ட 10% தொட்டுவிட்டதால் வீடு விற்பனை கடினமாகி விட்டது. இது 2010ல் 12% வரை ஆகலாம் என நிபுணர்கள் ஆரூடம் வேறு சொல்லியிருக்கிறார்கள். நியுஸி பொருளாதாரம் மிகவும் திறந்தன்மையானது (exposed). பக்கத்து ஆஸி எதாவது காலையில் மாற்றம் செய்தால் இங்க அதன் எபஃக்டு இங்க மாலையில் தெரியும் ..

இந்த வருடம் கோடை ஆசிய வெப்ப்பமண்டலம் போல இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் இன்றி புல் முளைக்காம போனதால் ஆடு மாடு எல்லாம் உணவின்றி போனது. அதனால் பல விவசாயிகள் ஆட்டு பண்ணைகளை விற்கும் நிலைமை. 10 லிட்டர் கறந்த மாடு 4 லிட்டர் கொடுப்பதால் பால் உற்பத்தி குறைந்து மாட்டுப்பண்ணை வைத்திருப்போருக்கும் பாதிப்பு. ஆக இன்வர்கார்கில்லில் 5 ஏக்கர் நிலத்தை கடன் இல்லாமலேயே வாங்குமளவுக்கு வீழ்ந்து இருக்கிறது..

இங்கே தெற்கு தீவில் மின் உற்பத்தி வடக்கு தீவை விட அதிகம். தெற்கிலிருந்து கடலுக்கடியில் கேபிள் போட்டு சப்ளை செய்கிறார்கள். மழை குறைந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு. இதுல அந்த கேபிள்ல வேர ஏதோ கோளாறாம் அதயும் மாத்தனுமாம். அதனால் மின் வெட்டுக்கு ரெடியாயிரு நைனா என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

ஆக இதனாலெ எல்லாம் இந்த நாட்ட விட்டு போகலீங்கோ..ரொமப நிபுணத்துவம் உள்ளவரா (specialize) இருந்து வேலை பூடுச்சுன்னா உங்க ஈகோவ ஓரம் கட்டிட்டு ஒன்னு சூப்பர் மார்கெட்டுல செக்கவுட் ஆபரேட்டராகிவிடலாம் இல்லேன்னா அப்டீக்கா டோல்ன்னு அரசாங்கம் தர்ரத கூச்சப்படாம வாங்கிட்டு ஸ்கை டிவில ரஃக்பி, க்ரிக்கெட், shortland street என்று இன்னபிர வற்றை பார்த்து காலம் கடத்தலாம்.. இது எதுவும் உங்களுக்கு ஒத்து வரலேன்னா அப்பால எங்கயாச்சும் (அப்டீன்னா ஆஸி), வேல கிடச்சா போய் சேந்துகலாம்...
கடந்த வருடம் மட்டும் 42,000 பேர் நிரந்தரமாக ஆஸிக்கு குடிபெயர்ந்துள்ளனர். கடந்த பதிநைந்து வருடங்களில் மிக அதிகம் என புள்ளிவிவரம் கூறுகிறது..இந்த தேர்தலில இதை வைத்தும் கட்சிகள் கும்மியடிக்கின்றன.

ஒரு காலத்தில் அப்பாக்கள் அதே காலை எட்டரைக்கு கிளம்பி அதே 5ம் நம்பர் சென்டரல் பஸ் பிடித்து அதே அலுவலகத்தில் அதே மேசையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களை கழித்து மாலை ஆறு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து பி.எஃப் லோனை அடைக்க சனி ஞாயிரானாலும் எஸ்ட்ரா வேலை செய்து....நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது, வாழனும் என்றால்?...

ஆனால் இன்று மாறுதல் என்பது மிக மிக இயல்பான ஒன்று.....என்ன ஒரு வித்யாசம் என்றால் ஒரு மாறுதலுக்கும் மற்றொரு மாறுதலுக்குமான இடைவெளி மிக குறுகிக்கொண்டு வருகிறது.....

மாறிய பின் மீண்டும் தொடரும் பதிவுகள் புதிய இடம் புதிய மனிதர்கள் புது அனுபவங்கள் சார்ந்து....

காட்சிப் பிழை

குடும்பத்தோட ஊர் சுத்தி பாக்க போனா இந்த மாதிரி படமெடுக்ரதுக்குள்ள ஒரு வழி பண்ணிருவாய்ங்க. "இப்ப இந்த மட்டைய எதுக்காக படமெடுத்திட்டுருக்க, நேரமாகுது இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள அடுத்தயும் பாத்துட்டு கிளம்பணும்".. அநேககமாய் எல்லா குடும்ப சுற்று-உலாவில் இது நடக்கும். வந்த __ நாள்ல எவ்வளவு பாக்க முடியிமோ அம்புட்டையும் பாத்துட்டு கிளம்பிரனும். என்ன பார்த்தோம், என்ன அடைந்தோம்? இவிங்கள வெச்சுக்கிட்டு படமெடுக்ரதுக்குள்ள யப்பா சாமி..

காற்றும் கடல் நீரும், அலையும் இணைந்து உருவாக்கிய யானை...




முல்லையின் மன்னவனை நினைத்து நெய்தல் வடித்த சிலை...





இந்த மாதிரி என் வீட்டில் விரிக்க ஆசை...




பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ
பொன்வடிவம் கொள்ளாத போது


(திருவருட்பா மூன்றாம்; திருமுறை: வள்ளலார் ராமலிங்க அடிகளார்)

பாரீஸில் ஒரு மாலை..

சமீபத்தில் பாரீஸ் சென்று வந்தேன். (இந்த இடத்தில அனுப்பி வைத்த நிறுவனத்தை நினைவு கூறாவிட்டால நன்றி மறந்தவனாவேன்). நான் சென்ற போது பனிக்காலம் உச்சத்தில். கையில் உரை மாட்டியும் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு குளிர். சரியான வரைபடமிருந்தால் நம்ம முனுசாமி கூட சுற்றிவிட்டு வந்து விடலாம். அந்த அளவுக்கு பேருந்து, ரயில் வசதி உள்ளது. ஒரே கஷ்டம் "ஃபான்ஜொ, "'மெர்சி" என்று இரண்டே வார்த்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. பிரஞ்சுகாரர்கள் அந்த அளவுக்கு தங்களின் மொழியை நேசிப்பதிலிருந்து, நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் " இவன் ஏன் பிரஞ்சு கத்துக்காம வந்து என் பிரானன வாங்குறான்னு" ஒரு லுக்கு விட்டுக்கிட்டேதான் பதில் சொல்றாங்க.

சரி இப்ப விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி தவிர்க்கவே முடியாத ஒன்று:

ஈஃபிள் கோபுரம

உலகத்துலயே அதிகமாக புகைப்படம் மெடுக்கப்படும் ஒரே இடமாயிற்றே, அதனால நானும் புடிச்சுக்கிட்டு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது, ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. மேலேயிருந்து பார்க்கும்போது ஏதோ கடந்து வந்த சரித்திரத்தயே பார்ப்பது போல் தோன்றியது. நான் மேலேயிருந்து கீழே இறங்குவதற்குள் மாலை நேரமாகிவிட்டது. மிக அழகாக கோபுரத்தை ஒளியூட்டும் மின் - விளக்குகள் பொருத்தி, அதற்கு நடுவே அயிரக்கணக்கில் பளிச்சிரும் விளக்குகள் மிக ரம்மியமான காட்சி. ஒரு முறையேனும் வாழ்கையில் சென்று பார்த்தே ஆகவேண்டும்.

இத்தோட நிறுத்திக்கிறேன். இது ஏதோ பாரீஸ் பயண கட்டுரை அல்ல. அதுதான் நிறைய பேர் எழுதியிருக்காங்களே. நா என்னத்த புதுசா எழுதறது. இது நான் அங்கு சந்த்தித்த ஒரு தமிழ் நண்பரை பற்றி. நாக்கு செத்துப்போய் நான் இந்திய ரெஸ்டாரன்ட்டை தேடிச் சென்ற போது நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே ஒன்று இந்தது.
வட இந்திய உணவு வகைதான். ஆனால் நடத்துவது ஒரு இலங்கை தமிழர். உணவு தயாரிப்பது பஞ்சாபி, மற்றும் உபிகாரர்கள். பரிமாறுவது இலங்கை தமிழர் என்ற ஒரு கூட்டனி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நான் சொல்ல வந்தது இந்த சர்வரை பற்றி. நான் தமிழன் என்று கூறியதும், உள்ளே சென்று அந்த வார விகடன், துக்ளக், குமுதம், எடுத்து வந்து காத்திருக்கும் நேரத்தில் படிக்குமாரு குடுத்ததிலிருந்த அந்த அந்யோன்யம் நான் பாரீசில்தான் இருக்கிறேனா என்று சந்தேகம் வந்துவிட்டது. கூட்டம் குறைந்த பின் பேசிக்கொண்டிருந்தோம். படிப்பை பாதியில் விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று வேலைக்கான விசாவுடன் வந்து, நான்கு பேருடன் ஒரு ரூமில் தங்கி, இந்த நாட்டில் வாழ்வதற்காக, நேரம் கிடைக்கும் போது பிரெஞ்சு மொழி பயில்வதை பற்றி சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல ஏறக்குறைய அனேகம் பேர் இப்படித்தான் இடம்பெயர்ந்துள்ளனர். பேச்சு அங்கே இன்னும் நிகழும் கொடுமைகளை சுற்றி வந்தது. பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த தன்னுடை நண்பன் சமீபத்தில், பத்திரிக்கை அலுவலகத்திலேயே ஆசிரியர் மற்றும் இன்னும் நான்கு பேரோடு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை பற்றி கூறினார். மிருகங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு மனிதருக்கில்லை என்பதை கூறும் போது மிகவும் கலங்கிப் போனார். சிறு வயதில் தான் வளர்ந்த கிராமத்தில் 'கிட்னா' என்ற நாய் குட்டியை அங்குள்ள எல்லோருமே வளர்த்ததையும், இன்று அது வளர்ந்து பெரிதாகி குட்டி போட்டு உயிருடன் இருப்பதாகவும், ஆனால் உடன் வளர்ந்த தன் நண்பர்கள் எட்டு பேரில் தான் மட்டுமே உயிருடன் இருப்பதாக சொன்னபோதுதான் அதன் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. அவருடைய பேராசிரியர் கூறுவாராம் , இன்றய காலகட்டத்தில் இந்த உலகத்தையே எண்ணி 80-100 முதலாளிகள் (capitalist) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எப்போது இவர்கள் அழிகிறார்களோ அப்போதுதான் சாதாரன மனிதனுக்கு உண்மையான் சுதந்திரம் என்றால் என்னவென்று புரியும்.

உண்மைதானோ? ஈழத்து மக்களுக்கு தீர்வு கானல் நீரோ?



பிகு: இந்த பதிவு பாரீஸ் நண்பருக்காக.